வடமாகாணம் முழுவதும் கள்ளு தவறணைகளை திறப்பதற்கு பனை அபிவிருத்திச் சபை அனுமதி!

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் முழுவதும் கள்ளு தவறணைகளை திறப்பதற்கு பனை அபிவிருத்திச் சபை அனுமதி!

வடமாகாணம் முழுவதும் இன்று தொடக்கம் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி கள்ளு தவறணைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிஷாந்த் பத்தராஜா கூறியுள்ளார். 

பனைஅபிவிருத்தி சபை தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், கொரோனாநிலைமை காரணமாக 

சகல கள்ளு தவறனைகளும் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக கள் விநியோகமும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மதுவரித் திணைக்களத்தினால் விசேட அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. 

அதாவது கள்ளினைபோத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கு முயற்சியை மேற்கொண்ட எமது ராஜாங்க அமைச்சர் மற்றும் மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கள்ளு தவறனை களை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தோம். அதற்கு சில நிபந்தனைகளுடன் வடக்கில் தவணைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

தவறனை திறக்க முடியும் ஆனால் தவறணைகளில் இருந்து கள் அருந்த முடியாது அத்தோடு அந்த பகுதியில் ஒன்று கூடி நிற்க முடியாது எனவும் சுகாதார நடைமுறையை பின்பற்றி கள் விற்க முடியும். எனவே இந்த அனுமதியிணை 

சரியான முறையில் பயன்படுத்தி செயற்பட வேண்டும் என தெரிவித்தார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு