கௌதாரிமுனை கடலட்டை பண்டையில் நின்ற சீனர்களை காணவில்லை! புதிதாக வந்திருப்போர் கூறும் புதிய கதை..

ஆசிரியர் - Editor I
கௌதாரிமுனை கடலட்டை பண்டையில் நின்ற சீனர்களை காணவில்லை! புதிதாக வந்திருப்போர் கூறும் புதிய கதை..

கிளிநொச்சி - கௌதாரிமுனை கடலட்டை பண்ணையில் நேற்றய தினம் சீன நாட்டவர்கள் எவரும் இருக்கவில்லை எனவும், அங்கே தமிழ்பேசும் நபர்களே இருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது. 

ஆனாலும் அங்கு சீன மொழியில் எழுதப்பட்டிருந்த உணவு பொதிகளையும் அவதானிக்க முடிந்ததுடன், மின்சார கட்டமைப்பு உள்ளிடட சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட தங்குமிடத்தினையும் காண முடிந்தது.

குறித்த பகுதியானது ஆரம்பத்தில் பூவரசன் தீவு என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த போதிலும் அப்பகுதி கல்முனை என அழைக்கப்படும் பிரதேசத்தின் கடல் எல்லையில் காணப்படுவதாக மீனவர்கள் கூறினர்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல் பண்ணையானது அமைந்துள்ள இடம் கடா பிடாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை எனவும், குறித்த கோவிலுக்கு சென்று வர முடியாத நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இவ்வாறான நிலையில் குறித்த பகுதி கால காலமாக தாம் பயன்படுத்தி வந்த போக்குவரத்துக்குரிய பகுதி எனவு்ம, அப்பகுதியிலேயே அவர்கள் இவ்வாறு கடலட்டை பண்ணையை அமைத்துள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, சீன நிறுவனத்தின் ஊழியர்களிடம் குறித்த பண்ணை அமைந்துள்ள விதம் தொடர்பில் ஊடகவியலாளர்களும், வருகை தந்திருந்தவர்களும் வினவினர், குறித்த பகுதியில் கடலட்டை அமைப்பதற்கு 

அப்பகுதி மீனவ சங்கமே அனுமதி அளித்ததாகவும், மாதாந்தம் 1 லட்சம் ரூபா வருமானம் குறித்த சங்கத்திற்கு வழங்க பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை குறித்த கடலட்டை பண்ணை பதிவு செய்யப்படவில்லை எனவும், கடல் தொழில் சங்கத்தின் அனுமதியுடனேயே இங்கு பண்ணை அமைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த 4ம் மாதமளவில் குறித்த பண்ணையை அமைத்ததாகவும் அவர் குறிப்பிடடிருந்தார். தாம் சீன நிறுவனத்தில் பணி புரிவதாகவும், சீனர்கள் தற்போது இங்கு இல்லை எனவும் குறிப்பி்ட்டுள்ள அவர் 

தாம் தற்போது பண்ணையில் கடமையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனாலும் இதுவரை பண்ணையை அகற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை குறித்த சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர். குறித்த பகுதியில் சீன நாட்டவர்கள் தங்கி நின்று 

கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். மக்கள் பிரதிநிதிகள் கள விஜயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 

 குறித்த பகுதியை கஜேந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பார்வையிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு