யாழ்.மாவட்டத்தில் 28 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 28 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 28 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடம் அகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட 

பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேருக்கும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 02 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு