யாழ்.மாவட்டத்தில் தீவிரமான கொரோனா அபாயம் தொடர்கிறது! நேற்றும் 67 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தீவிரமான கொரோனா அபாயம் தொடர்கிறது! நேற்றும் 67 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தில் 67 பேர் உட்பட வடக்கில் 73 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் 741 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 67 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும், யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்குமாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு