யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட, வடக்கில் 45 பேருக்கு கொரோனா தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட, வடக்கில் 45 பேருக்கு கொரோனா தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 41 பேர் உட்பட வடக்கில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்றய தினம் 579 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி யாழ்.மாவட்டத்தில்

யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,யர்ழ.போதனா வைத்தியசாலையில் 03 பேர்,

யாழ்.சிறைச்சாலையில் ஒருவர்,சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், அடங்கலாக 41 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு