கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் பாலத்தில் கவிழ்ந்து விபத்து! இருவர் பலி, 4 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் பாலத்தில் கவிழ்ந்து விபத்து! இருவர் பலி, 4 பேர் படுகாயம்..

கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் பாலத்தின் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். கரடியனாறில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம் கறுத்த பாலம் அருகில் கட்டுப்பாட்டை மீறி 

பாலத்திற்குக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இதில் சென்ற இருவர் இராணுவத்தினர் உயிரிழந்த துடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதேவேளை நீரோடையில் இருந்து ட்ரக் வண்டியை கரை சேர்க்கும் நடவடிக்கையில் கனரக வாகனம் கொண்டு இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதுடன் ஒருவரின் சடலத்தை தேடி வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு