தீவிர ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு! மன பயமே காரணம் என்கிறார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I
தீவிர ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு! மன பயமே காரணம் என்கிறார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்..

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி பெற்றமையால் தீவிர ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதான வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இன்று மாலை 6 மணிவரை 63 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய தினம் 

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களே இவ்வாறு சுகவீனம் அடைந்து வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.எனினும், அவர்களிற்கு தடுப்பூசியினால் தாக்கம் ஏற்படவில்லை எனவும், 

உடல்நிலை மற்றும் பயம் காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சரவணபவன் தெரிவிக்கின்றார்.இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் 

இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையியே இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். எனினும், குறித்த நோயாளர்களில் அபாயகரமான தாக்கத்தில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், 

சாதாரண நோயாளர் விடுதிகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாங்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு