கொரோனா தடுப்பூசி பெற்ற 25ற்கும் மேற்பட்டோருக்கு தீவிர ஒவ்வாமை..! கிளிநொச்சி வைத்தியசாலையில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
கொரோனா தடுப்பூசி பெற்ற 25ற்கும் மேற்பட்டோருக்கு தீவிர ஒவ்வாமை..! கிளிநொச்சி வைத்தியசாலையில் பரபரப்பு..

கிளிநொச்சி - ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டிருந்த சுமார் 25ற்கும் மேற்பட்டோர் தீவிர ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். 

இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு தொழிற்சாலை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். 

தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டு வருவதனால் மேலதிக விபரங்களை தொடர்ந்தும் எதிர்பாருங்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு