யாழ்.மாவட்டத்தில் 60 பேர் உட்பட வடக்கில் 131 பேருக்கு கொரோனா தொற்று! கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 60 பேர் உட்பட வடக்கில் 131 பேருக்கு கொரோனா தொற்று! கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 60 பேர் உட்பட வடமாகாணத்தில் நேற்றய தினம் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 03 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், வவுனியாவில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிய தொற்று நோயாளர்களுடன் யாழ்.மாவட்டத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் 

மொத்த எண்ணிக்கை 5,462 -ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கிளிநொச்சியில் -1,400, முல்லைத்தீவில் - 1,248, வவுனியாவில் -1,335, மன்னாரில் 885 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு