யாழ்.பருத்தித்துறை - கரவெட்டியில் ஜே/350 கிராமசேவகர் பிரிவு இன்று காலை 6 மணி தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது..! நாடு முழுவதும் 10 கிராமங்கள் இன்று முடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - கரவெட்டியில் ஜே/350 கிராமசேவகர் பிரிவு இன்று காலை 6 மணி தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது..! நாடு முழுவதும் 10 கிராமங்கள் இன்று முடக்கம்..

யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்கள் உள்ளடங்கலாக நாட்டிலுள்ள 5 மாவட்டங்களில் 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணி தொடக்கம் முடக்கப்படுவதாக இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வாக தொிவித்திருக்கின்றார். 

யாழ்.மாவட்டத்தில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஜே/350 கிராம சேவகர் பிரிவும், மன்னார் மாவட்டத்தில் பியர் மேற்கும் மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று அதிகாலை 6 மணி முதல் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் பதுளை மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம், கொழும்பு மாவட்டம் ஆகியவற்றிலும் 7 வரையான கிராமசேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி தொடக்கம் முடக்கப்பட்டிருக்கின்றது.

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு