அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்குள் நுழைய முயற்சித்த இளைஞன் மீது துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்குள் நுழைய முயற்சித்த இளைஞன் மீது துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில்..

மட்டக்களப்பு மென்டர்சன் வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்குள் நுழைய முயற்சித்த இளைஞன் மீது பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

இச்சம்பவம் சற்று முன் மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதி மென்டர்சன் வீதியில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட இளைஞன் மீது 

அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகதத்தில் இளைஞன் காயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞன்இ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் சற்று முன் மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு