படையினரின் எச்சரிக்கையை மீறியதற்காக டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு..! இன்று அதிகாலை கிளிநொச்சி - புளியம்பொக்கணையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
படையினரின் எச்சரிக்கையை மீறியதற்காக டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு..! இன்று அதிகாலை கிளிநொச்சி - புளியம்பொக்கணையில் சம்பவம்..

கிளிநொச்சி - நாகேந்திரபுரம் பகுதியில் மணல் கொண்டுசென்றோர் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

நாகேந்திரபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி ஊடாக 

மணல் ஏற்றியபடி சென்ற வாகனத்தினை படையினர் நிறுத்துமாறு தெரிவித்ததாகவும் இருந்தபோதிலும் அதனையும் மீறி வாகனம் பயணித்தமையால் 

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின்போது சாரதியின் உதவியாளர் கண்காடி துகள்களால் 

காயம் அடைந்த நிலையில் தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாம் மணல் ஏற்றுவதற்கான அனுமதியுடனேயே பயணித்ததாகவும், 

இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும்சாரதி தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு