யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற ஆசனம் 6 ஆக குறைந்தது! தமிழ் அரசியல்வாதிகள் விழிப்பூட்டாமையே காரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற ஆசனம் 6 ஆக குறைந்தது! தமிழ் அரசியல்வாதிகள் விழிப்பூட்டாமையே காரணம்..

2020ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இத் தகவலை வெளியிட்டுள்ளார். 2020 வாக்காளர் பட்டியலில் 

மக்கள் தம்மை இணைத்துக்கொள்வதில் காட்டிய அக்கறையீனம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் வாக்காளர் பட்டியலில் பதிவது தொடர்பில் 

விழிப்பூட்டாமை என்பனவே காரணமாகும். யாழ்.மாவட்டத்தில் இழக்கப்பட்ட உறுப்புரிமை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்படுவதனால்

ஹம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 18 இல் இருந்து 19 ஆக அதிகரித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு