காதலருடன் நட்சத்திர ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை!! -காதனுடன் கைது செய்யத பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
காதலருடன் நட்சத்திர ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை!! -காதனுடன் கைது செய்யத பொலிஸ்-

மும்பையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக தமிழ் பட நடிகை ஒருவர் காதலருடன் கைது செய்யப்பட்டார்.

குறித்த ஹே hட்டலில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அங்கு தீவிர கண்காணிப்பில் பொலிஸார் ஈடுபட்டனர். 

இந்நிலையில் பெண் ஒருவர் ஆண் நண்பருடன் சந்தேகப்படும் படியாக அங்குள்ள அறைக்கு சென்றதை கண்டனர். இதையடுத்து பொலிஸார் அந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு நடிகை நைய்ரா சா என்பவர் சிகரெட்டில் சரஸ் என்ற போதைப்பொருளை புகைத்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து பொலிஸார் அவரையும், அவரது காதலரை பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். 

அப் பரிசோதனையில் குறித்த இருவரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது. இதையடுத்து பொலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு