மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு நிதியமைச்சு ஒப்புதல் வழங்கியது..

ஆசிரியர் - Editor I
மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு நிதியமைச்சு ஒப்புதல் வழங்கியது..

நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலைகள் பூட்டப்பட்டுள்ளதால் ஒன்லைன் மூலம் பல்பொருள் அங்காடிகளிடமிருந்து மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

ஒன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கு கலால் திணைக்களம் நிதியமைச்சிடம் நேற்றய தினம் பிரேரணையை சமர்ப்பித்திருந்த நிலையில் இன்றைய தினம் நிதியமைச்சு ஒப்புதலை வழங்கியுள்ளதாக 

கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க கூறியுள்ளார். எனினும் குறித்த நடைமுறை அமுலாகும் நாள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் அனுமதி கிடைத்தால் மட்டுமே 

இந்த நடைமுறை அமுலக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு