யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் 2 வயதான 3 குழந்தைகள் உட்பட 6 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் 2 வயதான 3 குழந்தைகள் உட்பட 6 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

வடக்கில் 2 வயதான மூன்று குழந்தைகள் உட்பட 6 சிறுவர்களுக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கில் 42 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

அவர்களில் கரவெட்டி, முல்லைத்தீவு பிரதேசங்களில் இரண்டு வயதான மூன்று குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மேலும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6வயது, 9 வயது, 12 வயதான மூன்று சிறுவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு