21ம் திகதி பணத்தடையை நீக்குவதா? இல்லையா? 19ம், 20ம், திகதிகளில் கொரோனா நிலவரம் குறித்து மீளாய்வு கூட்டம்..

ஆசிரியர் - Editor I
21ம் திகதி பணத்தடையை நீக்குவதா? இல்லையா? 19ம், 20ம், திகதிகளில் கொரோனா நிலவரம் குறித்து மீளாய்வு கூட்டம்..

21ம் திகதி பயணத்தடையை நீக்குவதா? இல்லைய? என்பதை 19ம், 20ம் திகதிகளில் மீளாய்வு கூட்டங்களை நடாத்தி தீர்மானிப்போம். என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். 

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் அவர் கூறுகையில், பயணத்தடையை நீக்கவேண்டும். என்பதே அரசாங்கத்தின் விருப்பமுமாகும். ஆனால் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் உள்ளது. 

இந்நிலையில் 21ம் திகதி பயணத்தடையை நீக்குவது தொடர்பான இறுதி தீர்மானத்தினை 19ம், 20ம் திகதிகளில் கொரோனா நிலமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தை நடாத்தி தீர்மானிப்போம் எனவும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு