திருமணத்திற்கு பின் அதிக வாய்ப்புக்கள்!! -மணம் திறக்கும் பிரியாமணி-

ஆசிரியர் - Editor II
திருமணத்திற்கு பின் அதிக வாய்ப்புக்கள்!! -மணம் திறக்கும் பிரியாமணி-

தமிழில் பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியாமணி, திருமணத்துக்கு பின் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் சினிமாவில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து அண்மையில் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார். 

அந்த நேர்காணலில் அவர் தகவல் தெரிவிக்கையில்:- சினிமா துறை போட்டி நிறைந்தது. நேர்மையாக உழைத்தால் என்றாவது வெற்றி வரும். திருமணம் எனக்கு நடிக்க தடையாக இல்லை. கணவர் உதவியாக இருப்பதால் தொடர்ந்து நடிக்க முடிகிறது. 

திருமணத்துக்கு பின் அதிக வாய்ப்புகள் வருகிறது. எனக்கு வயதாகிவிட்டது என்றும் குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் என்றும் விமர்சிக்கின்றனர். அப்படி பேசுவது மனதுக்கு கஸ்டமாக உள்ளது என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு