யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்! அரச ஊழியரின் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றனர்...

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்! அரச ஊழியரின் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றனர்...

யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் அரச உத்தியோகஸ்த்தர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை வழிப்பறி கும்பல் பறித்து சென்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றய தினம் மாலை இடம்பெற்றுள்ளதுடன் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சுகாதார துறை ஊழியர் ஒருவரே மோட்டார் சைக்கிளை இழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவரிடம் கதைக்கப்பதுபோல் பாசங்கு செய்த வழிப்பறிக் கும்பல் இறுதியில் அவரை தள்ளி விழுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தப்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு