நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஒத்திவைக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஒத்திவைக்கப்பட்டது!

யாழ்.நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

இந்த மாதம் 10 ஆம் திகதி,கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடத்துவதற்கு 

இதற்கு முன்னர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், 

ஆலய அறங்காவலர் சபையினர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு