யாழ்.சுன்னாகம் - கந்தரோடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 2 பேர் கைது, இருவரை தேடுகிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் - கந்தரோடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 2 பேர் கைது, இருவரை தேடுகிறது பொலிஸ்..

யாழ்.சுன்னாகம் - கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டிருந்த சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 

கடந்த 2ம் திகதி சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்ட 4 போில் இருவர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டோரிடமிருந்து திருடப்பட்ட நகையில் உருக்கிய நிலையில் ஒரு தொகுதி நகையினையும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர்.

குறித்த திருட்டில் ஈடுபட்டவர்கள் சங்குவேலி மானிப்பாய் பொலிஸ் ப மற்றும் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்.மேலதிக விசாரணைக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.தலைமறைவாகியுள்ள இருவர் தொடர்பாக 

பொலிஸ் புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு