நயினை நாகபூசணி அம்மன் ஆலய கோபுரம் மீது காட்சி கொடுத்த நாகம்..!

யாழ்.நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுரம் மீது நாக பாம்பு ஒன்று காட்சி கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாகம் காட்சி கொடுப்பது அற்புதமாக கருதப்படுகின்றது. நாட்டில் கொரோனா இடர்காலம் நீடித்துவரும் நிலையில்,
நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா அடுத்துவரும் நாட்களில் வரும் நிலையில் நாகம் காட்சி கொடுத்துள்ளது.