யாழ்.மாவட்டத்தில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கல் குறித்து மாவட்டச் செயலர் விளக்கம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கல் குறித்து மாவட்டச் செயலர் விளக்கம்..!

யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கே 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு முதற்கட்டமாக வழங்கப்படும். ஏனையோருக்கு 2ம் கட்டமாகவே வழங்கப்படும் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

அரசினால் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு இடர்கால நிதியாக வழங்கப்படும் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவு யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது 

குறித்த நிதியானது முதற்கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே யாழ் மாவட்ட ரீதியில் வழங்கப்பட வுள்ளது. அதிலும் சமுர்த்தி, முதியோர் கொடுப்பனவு பெறுவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு பெறுவோருக்கே  முதற்கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஏனைய பிரிவினருக்கு அடுத்த கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை 

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பட்ட இடங்களில் மக்கள் மத்தியில்  குழப்பநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பொது மக்கள் அவ்வாறு குழப்பமடைய தேவையில்லை 

முதற் கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் அதன் பின்னர் ஏனையோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவித்த அரச அதிபர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு