புலனாய்வு பிரிவு என கூறியவர்களால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு..! நோய் காரணமாக இறந்தாக விளக்கம், அடித்தே கொல்லப்பட்டதாக உறவுகள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
புலனாய்வு பிரிவு என கூறியவர்களால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு..! நோய் காரணமாக இறந்தாக விளக்கம், அடித்தே கொல்லப்பட்டதாக உறவுகள் குற்றச்சாட்டு..

மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று இரவு புலனாய்வு பிரிவு என கூறிய நபர்களால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 22 வயது இளைஞன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

நேற்று இரவு 10.30மணியளவில் மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு ஏழாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுசன் என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து வெளியில் வருமாறு கூறியபோது குறித்த இளைஞர் வெளியில் வந்ததாகவும் இதன்போது வீதியில் நின்ற புலனாய்வாளர்கள் எனக்கூறிக்கொண்டவர்கள் 

குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞன் புலனாய்வாளர்கள் எனக்கூறப்பட்டவர்களினால் கடுமையான முறையில் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை குறித்த இளைஞன் நோய் காரணமாக இறந்துவிட்டதாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் தாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி திருமதி ஜீவராணி கருப்பையாப்பிள்ளை 

மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.டபிள்யு.ஜெயந்த தலைமையிலான பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு