யாழ்.கொடிகாமம் - கெற்பெலியில் கசிப்பு உற்பத்தி இடத்தை சுற்றிவளைத்த இராணுவம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - கெற்பெலியில் கசிப்பு உற்பத்தி இடத்தை சுற்றிவளைத்த இராணுவம்..!

யாழ்.கொடிகாமம் கெற்பேலி பகுதியில் இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்பில் சுமார் 300 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக 

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது. சம்பவத்தை அறிந்து கசிப்பு காய்ச்சியவர்கள், 

கசிப்பு உற்பத்தி பயன்படுத்தப்படும் கோடா மற்றும் வடித்த கசிப்பை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர். சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் 

கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு