யாழ்.மாவட்டத்தில் 148 பேர் உட்பட வடக்கில் 313 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று..! கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 148 பேர் உட்பட வடக்கில் 313 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று..! கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 148 பேர் உட்பட வடக்கில் 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தேசிய கொவிட் தடுப்பு செயற்பாட்டு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதன்படி நேற்றைய தினம் 1ம் திகதி வட மாகாணத்தில் மேலும் 313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் - 148 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் - 60 பேருக்கும், 

கிளிநொச்சி மாவட்டத்தில் - 49 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் - 32 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் - 24 பேருக்கும், என வடக்கு மாகாணத்தில் 313 பேருக்கு நேற்றயை தினம் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக 

கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு