யாழ்.மாவட்டத்தில் 18 சிறுவர்கள் உட்பட 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தில் 18 சிறுவர்கள் உட்பட 57 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேற்படி 57 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனாத் தொற்றுக்குள்ளான 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் 08 சிறார்களும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது. 01, 06, 06, 10, 15, 16 ஆகிய வயதுகளை உடைய சிறுமிகளும்,
02, 10 வயதுகளையுடைய சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களை விடவும்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சற்று முன்னர் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 சிறார்கள்
உட்பட்ட 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.