யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! நேற்று மட்டும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மாவட்ட செயலர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! நேற்று மட்டும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மாவட்ட செயலர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் தீவிரமாக உள்ளதாக கூறியிருக்கும் மாவட்டச் செயலர் க.மகேஸன், நேற்றய தினம் பீ.சி.ஆர் பரிசோதனையில் 102 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 45 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். 

மாவட்டத்தின் சமகால நிலமைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் இன்றுவரையான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3144 ஆக அதிகரித்துள்ளது. 

அதேவேளையில் நேற்று மூன்று இறப்புகள் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இறப்பு எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.சுமார் 3 ஆயிரத்து 298 குடும்பங்களைச் சேர்ந்த 2626 நபர்கள் தனிமைப்பட்டுள்ளனர்.  

ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் நான்கு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டிருந்தன. அதிலே தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு அன்ரனி புரம் கிராமம் இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட 3 கிராமங்களும் கட்டங்கட்டமாக சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய விடுவிக்கப்படும். என மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு