யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் ஒரு மாதகாலத்திற்கு பகுதி பகுதியாக மின்வெட்டு..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் ஒரு மாதகாலத்திற்கு பகுதி பகுதியாக மின்வெட்டு..!

யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இன்று தொடக்கம் ஒரு மாதத்திற்கு பகுதி பகுதியாக மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை மற்றும் மாதகல், மாதகல் இறங்குதுறை ஆகிய பகுதிகளில் இன்று முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு, செக்கட்டிப்புலம் வீடமைப்புத்திட்டம், கற்பகபுரம், மூன்று முறிப்பு, பெரியகாடு, பூவரங்குளம், சாளம்பைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 

இவ்வாறு மின்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை புதன்கிழமையும் யாழ்.மாவட்டத்தில் இளவாலை, மாரீசன்கூடல், மெய்கண்டான், பெரியவிளான், சேந்தன்குளம் ஆகிய பகுதிகளில் 

முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.அத்துடன், அதே காலப்பகுதியில் வவுனியாவில் ஒக்போபுர, கொக்கெலிய, மகாமயிலங்குளம், நொச்சிமோட்டை, பரன்னாட்டன்கல், 

ஓமந்தை, புதியசின்னக்குளம், சமணங்குளம், சாந்தசோலை, தரணிக்குளம் ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு மின்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு