யாழ்.மாவட்ட வாழை செய்கையாளர்கள், வாழைபழ வியாபாரிகளுக்கு அங்கஜன் இராமநாதன் வழங்கியுள்ள உத்தரவாதம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட வாழை செய்கையாளர்கள், வாழைபழ வியாபாரிகளுக்கு அங்கஜன் இராமநாதன் வழங்கியுள்ள உத்தரவாதம்..!

யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வாழைபழத்தை வெளிமாவட்டங்களில் விற்பனைக்காக கொண்டு செல்லும் அனுமதியை பெறுவதற்காக மாவட்ட செயலர்களுடன் கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் உறுதியளித்துள்ளார். 

இன்றைய தினம் திங்கட்கிழமை நீர்வேலி வாழைக்குலை சங்கத்திற்கு விஜயம் மேற்கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடிய நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள covid-19 தாக்கத்தினால் பல்வேறு தொழில் துறையினரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறு பாதிப்புகளை எதிர்நோக்கும் உற்பத்தித் தொழில் துறையினரை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.அதனடிப்படையில் அடிப்படைத் தேவைகளான உணவு பொருட்கள் எரிபொருள் மற்றும் நீர் விநியோகம் போன்றவற்றில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி 

அதற்கான செயற் திட்டங்களையும் உருவாக்கியுள்ளது.யாழ் மாவட்டத்தில் அதிக அளவிலான வாழைக்குலை செய்தியாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு தமது உற்பத்திப் பொருட்களை வழங்குவதை கணிசமான பங்கை வகிக்கின்றனர்.வாழைக்குலை செய்கையாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு 

நீர்வேலி வாழைக்குலை சங்கத்தினரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.ஏனெனில் அவர்களுக்குத் தான் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை பெறும் இடங்கள் அனேகமாக தெரிந்திருக்க வாய்ப்புண்டு. யாழ்ப்பாணத்திலிருந்து வழமையாக எடுத்துச்செல்லப்படும் வாழை குலைகள் மட்டக்களப்பு, மன்னார், புத்தளம், 

மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. ஆகவே யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வோர் தொடராக அப்பகுதி மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடி உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்லும் வர்த்தகர்கள் யாழில் இருந்து உற்பத்தி பொருட்களை 

கொண்டு செல்லக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு