யாழ்.அரசடி பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வெளியேறி நடமாடிய 5 பேருக்கு 7ம் திகதிவரை விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரசடி பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வெளியேறி நடமாடிய 5 பேருக்கு 7ம் திகதிவரை விளக்கமறியல்..

யாழ்.நல்லுார் - அரசடி பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் முடக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியே நடமாடிய 5 பேர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட நிலையில் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரசடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்தைச் சேர்ந்த 5 பேர் யாழ்ப்பாணம் சிவன் கோயிலடியில் வைத்து இன்று அதிகாலை 4 மணிக்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முடக்கப்பட்டிருக்கும் அரசடி பகுதியிலிருந்து வெளியே வந்திருந்ததுடன் நிறை மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். சந்தேக நபர்கள் இன்று மாலை யாழ்ப்பாணம் நீதிமன்றில் 

மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். தனிமைப்படுத்தல் பிரதேசத்திலிருந்து வெளியேறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பி அறிக்கை முன்வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மேலதிக நீதிவான், சந்தேக நபர்கள் ஐவரையும் வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு