பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழ்.வட்டுக்கோட்டையில் 3 கடைகள் உடைத்து திருட்டு..! சந்தேக நபர் ஒருவர் பால்மா பெட்டிகளுடன் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழ்.வட்டுக்கோட்டையில் 3 கடைகள் உடைத்து திருட்டு..! சந்தேக நபர் ஒருவர் பால்மா பெட்டிகளுடன் சிக்கினார்..

யாழ்.வட்டுக்கோட்டையில் நேற்றய தினம் இரவு அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்த கொள்ளை கும்பல் கடைகளில் இருந்து பெருமளவு பொருட்களை திருடி சென்றிருக்கின்றனர். 

இந்த திருட்டுச் சம்பவங்க்களுடன் தொடர்புடைய சுழிபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பால்மா வகைகள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர்.

திருட்டுச் சம்பவங்களை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள சந்தேக நபர், தான் தனியவே திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு