யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! காரைநகரை சேர்ந்தவர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! காரைநகரை சேர்ந்தவர்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. யாழ்.காரைநகரை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காமல் இருந்த குறித்த நபர் பின்னர் சுகாதார அதிகாரிகளால் வலிந்து, 

கோப்பாய் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பபட்ட நிலையில் சுகயீனமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

குறித்த நபர் காரைநகர் செம்பாடு பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு