யாழ்.மாவட்டத்தில் மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது ஏன்..? ஒரு சில வியாபாரிகளே காரணமாம், சுகாதார பரிசோதகர்கள் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது ஏன்..? ஒரு சில வியாபாரிகளே காரணமாம், சுகாதார பரிசோதகர்கள் விளக்கம்..

யாழ்.மாவட்டத்திலுள்ள மதுபானசாலைகள் மறு அறிவித்தல் வெளியாகும்வரை சீல் வைக்கப்பட்டமைக்கு காரணம் அதிக விலைக்கு வர்த்தசர்கள் சிலர் மிக மோசடியான வியாபாரத்தில் ஈடுபட்டமையே என சுகாதார பரிசோதகர்கள் கூறியுள்ளனர். 

மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில், மதுபானசாலைகள் உரிமையாளர்கள், மிகவும் சூட்சுமமான முறையில் ஆகக் கூடுதலான விலைக்கு மதுபானங்களை ​விற்பனை செய்துவருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. 

அதனையடுத்து எடுக்கப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கையாகவே மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு