யாழ்.தெல்லிப்பழையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலையுடன் சம்மந்தப்பட்ட சந்தேகநபர் 2 வருடங்களின் பின் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலையுடன் சம்மந்தப்பட்ட சந்தேகநபர் 2 வருடங்களின் பின் கைது..!

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் தனித்திருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பத்துடன் தொடர்பாக சந்தேகநபர் 2 வருடங்களின் பின்னர் மானிப்பாய் பகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

25 வயதுடைய அவர் இரண்டு ஆண்டுகளாக புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நிலையில் மானிப்பாய்க்கு வருகை தந்திருந்த நிலையில் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சி.நிதர்சன் தலைமையிலான அணியினர் கைது செய்தனர்.

தெல்லிப்பழை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு மே 6ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். 

மூதாட்டி அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன என்று உறவினர்கள் தெரிவித்திருந்தனர். சம்பவத்தையடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டனர். 6ஆவது சந்தேக நபர் தலைமறைவாகியிருந்தார். 

இந்த நிலையில் 6ஆவது சந்தேக நபர் 2 ஆண்டுகளின் பின் கைது செய்யப்பட்டுள்ளார். மூதாட்டி கொலை செய்யப்பட்ட போது நான் அவரது காலை பிடித்து வைத்திருந்தேன். என்னை இரண்டு ஆண்டுகள் தலைமறைவாகியிருக்குமாறு மற்றவர்கள் கூறினார். 

பொலிஸார் மறந்த பின்னர் வீட்டுக்கு வருமாறும் தெரிவித்திருந்தனர் என்று சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு