பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு..! இன்று தொடக்கம் விவசாயிகள், வியாபாரிகள் செல்ல அனுமதி, பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு..! இன்று தொடக்கம் விவசாயிகள், வியாபாரிகள் செல்ல அனுமதி, பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு..

பொருளாதார மத்திய நிலைங்களுக்கு மரக்கறி மற்றும் பழங்கள் கொண்டு செல்ல இன்று இரவு முதல் அனுமதிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

நாளையும் (30) நாளை மறுதினமும் (31) பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதால், இன்றிரவு பொருட்களை கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்படுவதாக அவர் கூறினார். 

பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களுக்கு பயணிக்கும் வாகனங்களுக்கு உரிய வகையில் அனுமதியை வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு