யாழ்.மாவட்டத்தில் 3 சிறுமிகள், 4 இளைஞர்கள் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 3 சிறுமிகள், 4 இளைஞர்கள் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று..!

யாழ்.மாவட்டத்தில் சண்டிலிப்பாய், நல்லூர், காரைநகர், சங்கானை, பருத்தித்துறை, தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 47 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொியவருகிறது. 

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இந்தத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 11 வயது சிறுமி, 

14 வயது சிறுமிகள் இருவர், 19 வயது இளைஞர் ஒருவர், 20 வயது இளைஞர்கள் ஐவர், 21வயது யுவதி ஒருவர், 24 வயது இளைஞர் ஒருவர் உட்பட்ட 19 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்று தெரியவந்துள்ளது.

இதுதவிர, நல்லூர் மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேரும், காரைநகர் மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேரும் சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேரும்,பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் மூவரும், 

தெல்லிப்பழை மருத்துவ அதிகாரி பிரிவில் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்என்றும் தெரிய வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு