யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவிலில் முன்னாள் போராளி கைது..! வாடியிலிருந்து ஆயுதங்கள் மீட்பாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவிலில் முன்னாள் போராளி கைது..! வாடியிலிருந்து ஆயுதங்கள் மீட்பாம்..

யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவிலில் முன்னாள் போராளி ஒருவர் இன்று காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கடந்த 2020ம் ஆண்டு தை பொங்கல் தினத்திற்கு முதல் நாள் இராணுவம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்டுவந்த குறித்த இளைஞன், 

தலைமறைவாகியிருந்து பின்னர் குடும்பத்தினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு நீதிமன்றம் ஊடாக விடுதலை செய்யப்பட்டார். 

இந்நிலையில் அவருடைய வாடியில் பொதி ஒன்றில் ஆயுதங்களை மீட்டிருப்பதாக தெரிவித்த பின்னரே படையினர் அவரைக் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அவருடைய கைது நாகர்கோவிலில் உள்ள அவருடைய வீட்டிலேயே இடம்பெற்றிருக்கின்றது. விசாரணையின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் 

என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு