யாழ்.நல்லுார் அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை..! 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை..! 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.நல்லுார் சுற்றாடலில் உள்ள அரசடி ஜே-103 கிராம சேவகர் பிரிவை முடக்குவதற்கு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மாகாண சுகாதார அமைச்சிடம் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. 

200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலமாக 22 பேர் அந்த பகுதியில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதன் காரணமாக குறித்த அரசடி பகுதியினை முடக்குவதற்கு 

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மாகாண சுகாதார பணிப்பாளர் அரச அதிபர், யாழ் பாதுகாப்பு படை தளபதி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசடிப்பகுதியில் உள்ள 

ஆலயம் ஒன்றில் சுகாதார நடைமுறைகளை மீறி தேர் உற்சவம் இடம்பெற்ற பின்னர் அந்தப் பகுதியில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு