யாழ்.காரைநகரில் முடக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம்..! அறிகுறிகளுடன் பலர் வீடுகளில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் முடக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம்..! அறிகுறிகளுடன் பலர் வீடுகளில்..

யாழ்.காரைநகர் ஜே-47 கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் காரைநகர் பிரதேச மருத்துவமைனக்கு நோய் அறிகுறிகளுடன் சென்ற பலருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை என தொிவிக்கப்படுகின்றது. 

காரைநகரில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சிலர் காணப்பட்ட நிலையில் அவர்களின் பீ.சி.ஆர் மாதிரிகள் பிரதேச மருத்துவமனை ஊடாக பெறப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் சுமார் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

இதனையடுத்து குறித்த பகுதி தேசிய கொவிட் தடுப்பு செயலணியினால் முடக்ப்பட்டது. இதேவேளை அந்த பகுதியை சேர்ந்த பலர் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சென்றதாகவும் அவர்களுக்கு கடந்த 25ம் திகதி பெறப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்

இன்னும் வெளியாகவில்லை. இதனால் தொற்று அறிகுறிகளுடன் அவர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கு பனடோல் மட்டும் வழங்கப்பட்டுவருகின்றது. இது தமக்கே ஆபத்தானது என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு