பயணத்தடை நீடிப்பு குறித்தும், 31ம் திகதி பயணத்தடை தளர்வு குறித்தும் நாளை உயர்மட்ட கலந்துரையாடலில் தீர்மானம்..!

ஆசிரியர் - Editor I
பயணத்தடை நீடிப்பு குறித்தும், 31ம் திகதி பயணத்தடை தளர்வு குறித்தும் நாளை உயர்மட்ட கலந்துரையாடலில் தீர்மானம்..!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயண தடையை நீடிப்பது குறித்து நாளை தீர்மானம் எடுக்கப்படும். என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணி தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, தற்போதைய நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு விசேட கூட்டம் ஒன்று நாளை இடம்பெறும். இதன்போது பயண தடையை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும்.

மேலும் 31ம் திகதி அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக 31ம் திகதி பயண தடையை தற்காலிகமாக தளர்த்துவது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. 

எனவும் அது குறித்தும் நாளை தீர்மானிப்படும். என இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு