முன் பகை காரமாண அதிகாலையில் வீடு புகுந்து அடித்துக் கொல்லப்பட்ட 4 பிள்ளைகளின் தாய்..!

ஆசிரியர் - Editor I
முன் பகை காரமாண அதிகாலையில் வீடு புகுந்து அடித்துக் கொல்லப்பட்ட 4 பிள்ளைகளின் தாய்..!

முன் பகை காரணமாக அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்து 4 பிள்ளைகளின் தாயை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - ஆயித்தியமலையில் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. 

நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை மரணமான தேவகியின் வீட்டுக்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் முன்னைய பகையை வைத்துக்கொண்டு பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது, இரு சாராரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தேவகி என்பவர் இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கப்பட்டு, 

செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது மரணமானார்.இச்சமபவத்தில் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி 

மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு