யாழ்.நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் திருட முயற்சித்த இருவர் மடக்கி பிடிக்கப்பட்டனர்..! பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிரடி..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் திருட முயற்சித்த இருவர் மடக்கி பிடிக்கப்பட்டனர்..! பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிரடி..

யாழ்.நகரில் பயணத்தடை அமுலில் இருந்த சமயம் வர்த்தக நிலையம் ஒன்றின் பின்னால் சென்று நீர் நிறைக்கும் இயந்திரத்தையும், வாகன உதிரி பாகங்களையும் திருட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நகரில் உள்ள உதிரிப்பாக விற்பனை நிலையம் ஒன்றின் பின்னால் சென்ற அங்கிருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தையும், வாகன உதிரிப்பாகங்களையும் திருட முயற்றித்துள்ளனர். 

குறித்த சம்பவம் யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் உள்ள புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்குள் நுழைந்த பொலிஸ் புலனாய்வு பிரிவு திருடர்களை மடக்க முயற்சித்துள்ளது. 

எனினும் துரத்தி சென்ற பொலிஸார் திருடர்களை மடக்கி பிடித்துள்ளனர். பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் பொற்பதி வீதியை சேர்ந்தவர் எனவும் மற்றயவர் நாவாந்துறையை சேர்ந்தவர் எனவும் தொியவந்துள்ளது. 

குறித்த இருவரிடமுமு் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு