யாழ்.காரைநகரில் பனைமரம் முறிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட வீட்டை மதிப்பீடு செய்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, நஷ்டஈடு வழக்க நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் பனைமரம் முறிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட வீட்டை மதிப்பீடு செய்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, நஷ்டஈடு வழக்க நடவடிக்கை..

யாழ்.காரைநகரில் பனைமரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்த வீட்டை அனர்த்த முகாமைத்துவ பிரிவு நோில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இழப்பீடு வழங்குவதற்கான பதிவுகளையும் மேற்கொண்டிருக்கின்றனர். 

நேற்று மாலையில் வீசிய கடும் காற்றினால் மாவட்டத்தின் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்திருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் நோில் சென்று பார்வையிட்டுள்ளனர். 

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தலைமையில் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் நேற்றைய தினம் காரைநகர் பகுதியில் காற்றின் தாக்கத்தினால் பனைமரம் முறிந்து 

வீட்டின் மேல் விழுந்ததால் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் வீட்டுக்கு விஜயம் செய்து சேதமடைந்த வீட்டுக்கு தற்காலிக கூரை விரிப்பினை வழங்கி வைத்ததோடு  நஷ்ட ஈட்டை வழங்குவதற்கான விபரங்களையும் சேகரித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு