பூநகரி - பல்லவராயன் கட்டில் கிராமசேவகரும், மனைவியும் யானை தாக்கியே உயிரிழந்தனர்..! மரண விசாரணையில் உறுதி..

ஆசிரியர் - Editor I
பூநகரி - பல்லவராயன் கட்டில் கிராமசேவகரும், மனைவியும் யானை தாக்கியே உயிரிழந்தனர்..! மரண விசாரணையில் உறுதி..

பூநகரி - பல்லவராயன் கட்டில் நேற்றய தினம் உயிரிழந்த கிராம சேவகரும், அவருடைய மனைவியும் யானை தாக்குதலுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் , நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கிராம சேவகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது-52) மற்றும் அவரது மனைவி சுனித்தா (வயது-50) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். 

கிராமசேவகர் சம்பவ இடத்திலும் அவரது மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கிராம அலுவலகரின் மனைவியின் இறப்பு விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றபோது, யானை தாக்கியதற்கான அடையாளங்கள் உடலில் காணப்பட்டதாக திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு