யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2523 குடும்பங்களுக்கும் தலா 10 ஆயிரம் பெறுமதியான நிவாரணம், வீடுகளுக்கு சென்று வழங்கப்படும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2523 குடும்பங்களுக்கும் தலா 10 ஆயிரம் பெறுமதியான நிவாரணம், வீடுகளுக்கு சென்று வழங்கப்படும்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சுகாதார முன் பாதுகாப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 2543 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் தொடர்பில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் கூறுகையில், 

மாவட்டத்தில் 2523 குடும்பங்களை சேர்ந்த 6413 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதியை அவர்களுடைய வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். 

குறித்த நிவாரணம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அரச உத்தியோகஸ்த்தர்களுக்கும் வழங்கப்படும் என மாவட்ட செயலர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு