யாழ்.பருத்தித்துறை - தும்பளையில் மரண சடங்கில் கலந்துகொண்ட பூசகர் உள்ளிட்டோரை தனிமைப்படுத்த சுகாதார பிரிவு நடவடிக்கை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - தும்பளையில் மரண சடங்கில் கலந்துகொண்ட பூசகர் உள்ளிட்டோரை தனிமைப்படுத்த சுகாதார பிரிவு நடவடிக்கை..!

யாழ்.பருத்தித்துறை - தும்பளையில் வங்கி முகாமையாளரின் தந்தையின் மரண சடங்கில் கலந்து கொண்ட பூசகர் உள்ளிட்டோரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார். அவருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.

அதன் பெறுபேறுகள் நேற்று மாலை கிடைக்கப்பெற்றபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் வங்கியாளரின் தந்தை காலமாகிய நிலையில் இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றுள்ளது. 

அதனால் வங்கியாளரின் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள், கிரியை செய்த பூசகர் உள்ளிட்டோரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை 

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு