யாழ்.மாவட்டத்தை ட்ரோண் கமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்..! பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டத்தை தவிர்ப்பது சிறந்தது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தை ட்ரோண் கமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்..! பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டத்தை தவிர்ப்பது சிறந்தது..

யாழ்.மாநகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளை ட்ரோண் கமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

விமானப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று காலை யாழ்.நகரம், நல்லுாரை அண்மித்த பகுதிகள் அடங்கலாக பல இடங்களில், 

தீவிர கண்காணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருக்கின்றனர். குறித்த ட்ரோண் கமரா கண்காணிப்பு பிரிவுடன் உடனடியாக செயற்படகூடிய

பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவு ட்ரோண் கமரா மூலம் அடையாளப்படுத்தப்படும் இடத்திற்குள்

அதிரடியாக நுழைந்து பயணத்தடையை மீறுவோர் மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறுவோரை கைது செய்யும். 

பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பது நல்லது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு