யாழ்.ஆனைக்கோட்டையில் வீட்டின் மீது முறிந்து விழுந்த பனைமரம்..! 4 பேர் பாதிப்பு, வீடு பெருமளவு சேதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆனைக்கோட்டையில் வீட்டின் மீது முறிந்து விழுந்த பனைமரம்..! 4 பேர் பாதிப்பு, வீடு பெருமளவு சேதம்..

யாழ்.ஆனைக்கோட்டையில் காற்றினால் பனைமரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் வீடு சேதமடைந்திருக்கின்றது. 

ஆனைக்கோட்டைமுருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது. 

நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள காணிலுள்ள பனைமரம் முறிந்து வீழ்ந்த்தனால் வீடொன்று சேதமடைந்துள்ளது. 

இதனால் வீட்டிலிருந்த ஒலிபெருக்கி சாதன பொருட்களும் சேதமடைந்துள்ளன. இதனால் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் குறித்த வீட்டிற்கு முன்னூலுள்ள வெற்றுக் காணியிலிருந்த பனை மரமும் வீழ்ந்துள்ளது. ஏனைய பனை மரங்கள் தற்போது வெட்டப்படுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு