யாழ்.காரைநகரில் 2 நாட்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று..! நேற்று 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் 2 நாட்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று..! நேற்று 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு தொற்று..

யாழ்.காரைநகரில் நேற்றய தினம் 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் நேற்று 10 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலும் 7 பேருக்கு தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை நேற்றய தினம் 10 வயது, 11வயது, 12 வயதுடைய 3 சிறுமிகளுக்கும், 14 வயதான ஒரு சிறுவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு